Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) எதிர்பாராத் தாக்கம் காரணமாக முகம் கொடுக்கப்படுகின்ற சவால்களை சுமூகமாக்குவதற்கான தேசிய அளவிலான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு சிறப்பு வைப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் ஆலோசனையுடன் இலங்கை அரசாங்கமானது, நாட்டின் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) எதிர்பாராத் தாக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கான தேசிய அளவிலான முயற்சிகளுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒரு சிறப்பு வைப்பு கணக்கினை அறிமுகப்படுத்துகிறது.

அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணும் பொருட்டு மேலதிக வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றன

கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலின் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணுதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீது தற்போது காணப்படுகின்ற அழுத்தத்தினைக் குறைத்தல் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக மூலதனக் கொடுக்கல்வாங்கல் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் வழிமுறைகளை விதிக்கின்ற கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

2020 ஏப்பிறல் 03 அன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஏப்பிறல் 03 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானமானது, சந்தை நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்ட வழிமுறைகளை பூரணப்படுத்துவதுடன், கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவலின் வெளித்தாக்கத்தினாலும் நாட்டிற்குள் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டுப்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கு உள்நாட்டு நிதியியல் சந்தையினை இயலுமைப்படுத்தும்.
 

ரூ.50 பில்லியன் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதோடு, கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது

கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, கடன் மீள்செலுத்தலைப் பிற்போடுதல் (மூலதனம்+வட்டி) மற்றும் ஒரு தொழிற்படு மூலதனக் கடன் உள்ளடங்கலான ஒரு பரந்தளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்துவதென 2020.03.20இல் அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஓர் மீள்நிதியிடல் வசதியை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் (நிதி நிறுவனங்கள்) ஆகியவை 2020.03.25இல் ஆரம்பமாகும் இம் மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுவதற்குத் தகுதியானவை என்பதோடு அவை அறிவிக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கலாம்.

பணவீக்கம் 2020 மாச்சில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையே காரணமாக அமைந்தன. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவுப் பணவீக்கமானது 2020 பெப்புருவரியின் 14.7 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 12.8 சதவீதத்திற்கு வீழச்சியடைந்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவல்லாப் பணவீக்கமானது 2020 மாச்சில் 2.5 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 
 

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம் கொடுக்கின்ற உடனடியான அச்சுறுத்தல்களை மிகவும் கருத்திற்கொண்டு மூலதன விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பின்தள்ளிப்போடப்படும் வேளையில் தற்காலிக படிமுறையாக குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.
 

Pages

சந்தை அறிவிப்புகள்