Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

அரசாங்கம் பிட்ச் தரமிடலின் அவசரமான தரமிடல் செயற்பாட்டினை வன்மையாக மறுதலிக்கின்றது

பெருமளவிற்கு ஆய்ந்தமைவில்லாத ஓர் நடத்தையாக பிட்ச் தரமிடல் 2021 திசெம்பர் 17ஆம் நாளன்று இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டுத் தரமிடலினைக் குறைத்தது. இதனூடாக ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலொன்றில் இலங்கையில் நடைபெற்றுவரும் நேர்க்கணிய அபிவிருத்திகளை பிட்ச் தரமிடல் அங்கீககரிக்க தவறியமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்நடவடிக்கையானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தரமிடலின் வாத ஆதாரமற்ற குறைப்பினைப் போன்றதாகும். குறிப்பாக பொருளாதாரத்தின் சகல துறைகளிலுமான அண்மைய அபிவிருத்திகள் மற்றும் அண்மித்துவரும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ச்சியாக பிட்ச் தரமிடலிற்கு இற்றைப்படுத்தப்பட்டது என்பதனை குறிப்பாக கருத்திற்கொள்ளும்போது பன்னாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தரமிடல் முகவராண்மையொன்றின் தரப்பிலிருந்து இலங்கையின் தரமிடலைக் குறைப்பதற்கான இத்தகையதொரு விரைவுத்தன்மையானது சிந்தனைக்கெட்டாததொரு விடயமாகக் காணப்படுகின்றது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ)- 2020

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், மேல் மாகாணம் பொருளாதாரத்தின் உயிரோட்டத்தின் மையமாக தொடர்ந்தும் விளங்கிய அதேவேளை அதன் பங்கு வீழ்ச்சியடைந்து ஒட்டுமொத்த சுருக்கமடைதலுக்கும் பங்களிப்புச்செய்தது.

நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (38.0 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மெதுவடைந்ததன் விளைவாக அதன் பங்கு 2019 இலிருந்து 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.3 சதவீதம்) மற்றும் வடமேல் (11.0 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் காணப்பட்டன. 

வடமேல், தென், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்குகள் அதிகரித்த அதேவேளை மேல் மற்றும் வட மாகாணங்களில் ஆண்டிற்கு ஆண்டு பங்கு வீழ்ச்சிகள் அவதானிக்கப்படக்கூடியதாக இருந்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2021 நவெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 நவெம்பரில் விரிவடைந்தன.

நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்புவதிலிருந்து நன்மையடைந்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 நவெம்பரில் தொடர்ந்தும் விரிவடைந்து 61.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. உற்பத்தி, புதிய கட்டளைகள் மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் இவ்வதிகரிப்பிற்கு தொடர்ந்தும் பிரதானமாகப் பங்களித்தன. 

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2021 நவெம்பரில் 62.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, மேலும் உறுதியான செயலாற்றுகையினைக் குறித்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இவ்வதிகரிப்பிற்கு துணையளித்திருந்தன. 

கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) “கொவிட்-19 சுகாதாரக் கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” ரூ.50 மில்லியனை அன்பளிப்புச்செய்தது

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று பரவலினை கட்டுப்படுத்தி அதனோடிணைந்த சமூக நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டத்தினை இலக்காகக் கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை வலிமைப்படுத்துவதற்காக சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களினால் தாபிக்கப்பட்ட “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” பரந்தளவிலான பொறுப்புகள் உரித்தளிக்கப்பட்டுள்ளன. “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொடையாளிகள் தமது நிதியியல் பங்களிப்புக்களை வழங்கலாம்.

“கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்” தலைவர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கொடுகடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் திரு. நந்தி அந்தோனியிடமிருந்து “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக” ரூ.50 மில்லியன் கொண்ட அன்பளிப்பினைப் பெற்றுக்கொண்டார்.

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் தொடர்ச்சியான திடீர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றது. இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பலப்படுத்தப்படும்.

2021 நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது, பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

“உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான மேலதிக ஊக்குவிப்புத் திட்டம்” பற்றிய தொழிற்பாட்டு அறிவுறுத்தலை மத்திய வங்கி வழங்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படுகின்ற ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக 2021.12.01 தொடக்கம் 2021.12.31 வரையான காலப்பகுதியின் போது உரிமம்பெற்ற வங்கிகள், ஏனைய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைசார்ந்த வழிகளூடாக தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற போது அத்தகைய நிதியங்களுக்காக  ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ஊக்குவிப்பாக ரூ.8.00 கொண்ட தொகையினை கொடுப்பனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2021 திசெம்பர் மாதகாலப்பகுதியில் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களினால் அனுப்பப்படுகின்ற பணத்திற்காக ஐ.அ.டொலர் ஒன்றிற்கான மொத்த ஊக்குவிப்புத் தொகை ரூ.10.00 ஆக அமைந்திருக்கும்.

Pages

சந்தை அறிவிப்புகள்