பெருமளவிற்கு ஆய்ந்தமைவில்லாத ஓர் நடத்தையாக பிட்ச் தரமிடல் 2021 திசெம்பர் 17ஆம் நாளன்று இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டுத் தரமிடலினைக் குறைத்தது. இதனூடாக ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலொன்றில் இலங்கையில் நடைபெற்றுவரும் நேர்க்கணிய அபிவிருத்திகளை பிட்ச் தரமிடல் அங்கீககரிக்க தவறியமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்நடவடிக்கையானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தரமிடலின் வாத ஆதாரமற்ற குறைப்பினைப் போன்றதாகும். குறிப்பாக பொருளாதாரத்தின் சகல துறைகளிலுமான அண்மைய அபிவிருத்திகள் மற்றும் அண்மித்துவரும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ச்சியாக பிட்ச் தரமிடலிற்கு இற்றைப்படுத்தப்பட்டது என்பதனை குறிப்பாக கருத்திற்கொள்ளும்போது பன்னாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தரமிடல் முகவராண்மையொன்றின் தரப்பிலிருந்து இலங்கையின் தரமிடலைக் குறைப்பதற்கான இத்தகையதொரு விரைவுத்தன்மையானது சிந்தனைக்கெட்டாததொரு விடயமாகக் காணப்படுகின்றது.
















