இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த ''ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன". என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.