Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 சனவாி

கடந்த சில மாதங்களில் அவதானிக்கப்பட்டவாறு, வர்த்தகப் பற்றாக்குறை 2019 சனவரியில் தொடர்ந்தும் அதன் மேம்பட்ட போக்கினைக் கொண்டிருந்தது. 2018 திசெம்பரின் ஐ.அ.டொலர் 701 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் 2018 சனவரியின் ஐ.அ.டொலர் 1,049 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் ஒப்பிடுகையில், இம்மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 617 மில்லியன் கொண்ட வர்த்தகப் பற்றாக்குறையொன்று பதிவுசெய்யப்பட்டது. 

வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்த வருவாய்களினதும் இறக்குமதிச் செலவினத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினதும் இணைந்த தாக்கமே காரணமாகும். 2019 சனவரியில் ஏற்றுமதிகள் 7.5 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தவேளையில் இறக்குமதிகள் 17.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன.

2019 சனவரியில் சுற்றுலாவருகைகள் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்குஆண்டு) அதிகரித்தமையின் மூலம் இம்மாதகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 458 மில்லியன் கொண்ட வருவாய்களைத் தோற்றுவித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 மாச்சு

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 46–மாதம் உயர்வுத்தன்மையை அடைந்திருந்ததுடன் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஓர் எழுச்சியையும் சமிக்ஞைப்படுத்தியிருந்தது. பருவகால கேள்விகளுக்கு இணங்கிச்செல்லும் வகையில் குறிப்பாக உணவு மற்றும் குடிபானங்கள் தயாரிப்பு தொடர்பில் அதிகரித்த புதிய கட்டளைகளினால் மார்ச் மாதத்தில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரித்திருந்தது. 

ஏப்பிரல் மாதத்தின் புதுவருட விடுமுறைகளின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி மட்டங்களை அடைந்துகொள்ளும் நோக்கில் உற்பத்தியும் கணிசமானளவில் அதிகரித்திருந்தது. இறுக்கமான உற்பத்தி அட்டவணைகளுக்கு ஏற்றவகையில் மாதகாலப்பகுதியில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை என்பனவும் அதிகரித்திருந்தன. குறிப்பாக புடவைகள் மற்றும் ஆடைகள் துறையிலுள்ள பெருமளவான பதிலளிப்பாளர்கள் முன்னோக்கிய பண்டிகை விடுமுறைகளின் கட்டளைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலதிக நேர வேலையினை மேற்கொள்ளவேண்டியமையை குறித்துக்காட்டியிருந்தனர். மேலும், நிரம்பலாளர்களின் விநியோக நேரங்களின் விரிவாக்கமும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்கு சாதகமாக பங்களித்திருந்தது. 

இலங்கையில் நிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது

Dr. P Nandalal Weerasinghe, Senior Deputy Governor, Central Bank of Sri Lanka Launching the Roadmap for Sustainable Finance in Sri Lanka at the Sustainable Banking Network Global Meeting of the International Finance Corporation.

இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்கள் பன்னாட்டு நிதியக் கூட்டுத்தாபனத்தின் நிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் இலங்கையின் நிலைத்திருகக்கூடிய நிதிக்கான வழிகாட்டலினை வெளியிட்டிருக்கின்றார்.

அரச பிணையக் கொடுக்கல்வாங்கல்களின் அதேநேர அறிவித்தல்கள் (குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூல எச்சரிக்கைச் சேவை)

அரச பிணையங்களின் முதலீட்டாளர்களின் லங்காசெக்குயர் முறைமையின் ஷவாடிக்கையாளர்கள்| விழிப்புணர்வினை மேம்படுத்தும் பொருட்டு மற்றும் முதலீடுகளுக்கு மேலுமொரு சிறப்பியல்பினை அறிமுகப்படுத்தும் முகமாகவும், லங்காசெக்குயர் முறைமையை நடைமுறைப்படுத்தி பராமரிக்கும் இலங்கை மத்திய வங்கியானது குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூல எச்சரிக்கை சேவையினை 2019 மாச்சு 25 முதல் நடைமுறைப்படுத்தியது. 

வாடிக்கையாளர்களின் பிணையக் கணக்குகளில் இடம்பெறும் பத்திரங்களற்ற பிணையங்களின் ஒவ்வொரு அசைவின் அதேநேர அறிவித்தல்கள், குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் எச்சரிக்கையின் மூலமாக, அரச பிணையங்களின் முதலீட்டாளர்களுக்கு இச்சேவையின் மூலம் வழங்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் அவர்களது பிணையக் கணக்குகளில் கொடுக்கல்வாங்கல் இடம்பெற்றதற்கான அறிவுறுத்தல்களை ('லங்காசெக்குயர்" இலிருந்து குறுஞ்செய்தி மற்றும் 'reply@cbsl.lk" இலிருந்து மின்னஞ்சல்) உடனடியாகப் பெற்றுக்கொள்வர். 

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 02 - 2019

மத்திய வங்கியின் நாணயச்சபை இன்று, 2019 ஏப்பிறல் 08, நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டு மட்டத்தை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டியதன் பரந்த நோக்குடன், உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் என்பவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக்கவனமாக பகுப்பாய்வு செய்ததன் பின்னர் நாணயச்சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. 

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்கு ஒரு கருமபீடத்தினை திறத்தல்

2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது. 

இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். 

நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். இக்கருமபீடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரு தனிநபரினால் பெற்றுக்கொள்ளக்கூடிய ரூ.1/=,ரூ.2/=, ரூ.5/=, ரூ.10/= போன்ற ஏதாகிலும் முகப்பெறுமதியிலிருந்து உயர்ந்தபட்சப் பெறுமதி ரூ.20,000 ஆகும். 

Pages

சந்தை அறிவிப்புகள்