Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை அபிவிருத்தி முறிகள் வழங்கல்

இலங்கை அபிவிருத்தி முறிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுவதுடன் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் பெயர்குறிக்கப்பட்டவையாகும். மிக அண்மைய இலங்கை அபிவிருத்தி முறி ஏலவிற்பனையானது 2020.11.18ஆம் தீர்ப்பனவு திகதியுடன் 2020 நவெம்பர் 10–13 வரை இடம்பெற்றதுடன், இது ஐ.அ.டொலர் 24.82 மில்லியனைத் திரட்டுவதற்கு இயலச்செய்தது. சொல்லப்பட்ட ஏல விற்பனையில் வழங்கப்பட்ட முதிர்வுகள் ஒரு ஆண்டு 2 மாதங்களிலிருந்து 4 ஆண்டுகள் 2 மாதங்கள் வரை வேறுபட்டதுடன் 6.69 சதவீதத்திலிருந்து 6.82 சதவீதம் கொண்ட நிலையான வீதத்தில் வழங்கப்பட்டன.

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதங்கள்

கொவிட்-19இன் இரண்டாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதத்தினை 2020 ஒத்தோபர் 1 இலிருந்து ஆரம்பமாகும் ஆகக்கூடிய ஆறு மாத காலத்திற்கு நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளைக் கேட்டுக் கொள்கின்றது. தகுதியுடைய கடன்படுநர்கள் 2020 நவெம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் கடன் காலதாமதத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 செத்தெம்பர்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான வீழ்ச்சி, தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மூலம் துணையளிக்கப்பட்டு 2020 செத்தெம்பரில் மீட்சியடைந்தது.  மாதகாலப்பகுதியில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக மீளுயர்வு அத்துடன் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறைவு என்பன காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை 2020 செத்தெம்பரில் மேம்பட்டது. 2020 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள், 2011இன் இறுதியிலிருந்து மிக உயர்வான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. நிதியியல் கணக்கில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையானது மாதகாலப்பகுதியில் சிறிதளவு உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள், செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்துக்கொள்வதற்கு வெளிநாட்டுச் செலாவணியினை தேறிய அடிப்படையொன்றில் ஈர்ப்பதற்கு மத்திய வங்கியினை இயலச்செய்தது. இவ் அபிவிருத்திகளைப் பிரதிபலித்து இலங்கை ரூபா 2020 செத்தெம்பர் மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தது.

மத்திய வங்கியானது 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகைக் காலப்பகுதியினை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கின்றது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக  24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி,“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்”என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தரவிறக்கப்படலாம்.*

பொருளாதார அபிவிருத்திகளின் கிரமமான இற்றைப்படுத்ததலுக்கு மேலதிகமாக, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளானது” 2020 ஒத்தோபர் நடுப்பகுதி வரையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களை கருத்திற்கொண்டு 2020 ஏப்பிறலில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தலினையும் வெளிப்படுத்துகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலினால் ஏற்பட்ட பன்மடங்கு சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் நிச்சயமற்றதன்மைக்கிடையில் பொருளாதாரமானது பயணிக்கின்ற முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருடத்தின் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

அக்சிஸ் பாங்க் லிமிடெட்டிற்கு (அக்சிஸ் கொழும்புக் கிளை) வழங்கப்பட்ட உரிமத்தினை அக்சிஸ் பாங்க லிமிடெட், இந்தியாவின் கோரிக்கைக்கிணைங்க இரத்துச்செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அக்சிஸ் பாங்க் லிமிடெட், இந்தியா, அதன் உலகளாவிய செயற்பாடுகள் குறித்து 2019இல் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தினைத் தொடர்ந்து மேற்கொண்ட கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினையும் இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.

நாணயச் சபையினால் விதிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் செயற்பாட்டின் மீது வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் திருப்தியடைவதனால் அக்சிஸ் பாங்க் லிமிடெட்டிற்கு வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 2020 ஒத்தோபர் 30 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்யப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்