'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் அபிவிருத்தி அலுவலர்களுக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் 'வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை 2019 பெப்புருவரி 28ஆம் நாளன்று மு.ப. 8.30 மணியிலிருந்து மாத்தறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடத்தியது. வளவாளர்கள் தொழில்முயற்சியாண்மை திணைக்களம் மற்றும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் வர்த்தகபீடம் என்பனவற்றினால் ஒழுங்குசெய்யப்பட்டனர்.