தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள திறன் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்திலிருந்து சித்தியடைந்து வெளியேறிய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 ஒத்தோபர் 05 அன்று தாலல்ல, திறன் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் கோட்போர்கூடத்தில் காலை 9.00 மணியளவில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிப்போன் பெயின்ற் லங்கா (பிறைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ராஜ் ஹேவாபொவல்ல வளவாளராவார்.