"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி - புசல்லவ, பரகடுவ

இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட "சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி பரகடுவ, புசல்லவில் அமைந்துள்ள சப்பிரகமுவ மாகணசபையின் முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தில் 2018 யூன் 21 அன்று மு.ப 9.00 மணிக்கு நடைபெறும்.