Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

த பினான்ஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கான இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் நட்டஈட்டுக் கொடுப்பனவுகள்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 தொகைக்குட்பட்டு தீவுமுழுவதுமுள்ள 63 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக 2020.06.07 அன்று ஆரம்பிக்கப்பட்டன. 

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மூலம் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட ஏறத்தாள 147,000 வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கத் தேவையான நிதியங்கள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2020.07.12ஆம் திகதி வரை 19,279 வைப்பாளர்கள் தமது நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதுடன் அத்தகைய வைப்பாளர்களுக்கு ரூ.5,175,336,249.68 (ஏறத்தாழ ரூ.5.175 பில்லியன்) கொண்ட தொகை கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபாரங்களினை இடைநிறுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. 

சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதனை ஊக்குவிப்பதற்கான மேலதிக வழிமுறைகள்

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020.04.08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக பதிலிறுத்தி இதுவரையிலும் சிறப்பு வைப்புக் கணக்குகளினுள் ஐ.அ.டொலர் 87 மில்லியன் தொகையினை (ஏறத்தாழ) இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது என்பதனைக் குறிப்பிடுவது ஊக்கமளிக்கின்றது.

இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையுடனான ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்குகளை ஊக்குவிப்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டவாறு மேலும் வழிமுறைகளை எடுத்துள்ளது.

முழுவடிவம்

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்காக மத்திய வங்கி ரூ.60 பில்லியனுக்கும் கூடுதலான தொழிற்படு மூலதனக் கடன்களுக்கு ஒப்புதலளித்திருக்கிறது

2020 யூன் 10ஆம் திகதியுடன் முடிவடைந்த இவ்வார காலப்பகுதியில் ரூ.6,978 மில்லியன் தொகை கொண்ட 2,066 புதிய கடன்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுடன் 2020 யூலை 10ஆம் நாள் உள்ளவாறு இலங்கை மத்திய வங்கி சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிர்ப்பு வசதியின் கீழ் ரூ.60,250 மில்லியன் கொண்ட 22,306 கடன்களுக்கு ஒப்புதலளித்தது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூலை 09ஆம் நாள் உள்ளவாறு நாடளாவிய ரீதியில் 13,333 கடன்பாட்டாளர்களிடையே ரூ.30,526 மில்லியன்களைப் பகிர்ந்தளித்துள்ளன.

நாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 யூலை 08ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தூண்டி அதன்மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கல் தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு சபை இத்தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது. இது, குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளுள்ள சூழலில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்கும். 

நிதி மற்றும் நிதிக் குத்தகைக்குவிடுதல் வியாபாரங்களின் ஒழுங்கீனங்கள் மற்றும் சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகளை விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கான குழு

நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரங்களில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதி மற்றும் நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரங்களின் ஒழுங்கீனங்கள் மற்றும் சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கும் அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதந்துரைப்புக்களைச் செய்வதற்குமாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றினை நியமித்திருந்தார். 

Pages

சந்தை அறிவிப்புகள்