இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 2020 நவெம்பர் 19 அன்று கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது. குறித்த ஊழியர் தற்போது மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து மத்திய வங்கி துரிதமாகச் செயற்பட்டு, அதன் தலைமை அலுவலக வளாகத்தில் கடுமையான துப்பரவு மற்றும் தொற்றுநீக்கம், நெருங்கிய தொடர்புடையவர்களை கண்டுபிடித்தல் மற்றும் சாத்தியமான தொடர்புடையவர்களுக்கு பீசிஆர் (PCR) பரிசோதனைகளை ஏற்பாடுசெய்தல் உள்ளடங்கலாக நோய்ப்பரவலினைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து ஏனைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்றலில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை வழிமுறையொன்றாக, இதுவரையிலும் வங்கி வளாகத்தில் நேரடியாகத் தொழிற்பட்ட வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவமும் 2020 நவெம்பர் 20 தொடக்கம் இரு வார காலப்பகுதிக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.