வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள், கடந்த 5 வருடங்களாக ஐ.அ.டொலர் 7 பில்லியனுக்கும் அதிகமாக வருடாந்த சராசரி பெறுமதியுடன் நாட்டினுள் வருகின்ற முக்கிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சலொன்றாக இருந்து வருகின்றது. இவ்வுறுதியான, படுகடன் அல்லாத உட்பாய்ச்சலைக் கருத்திற்கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பணியாளருக்கும் அதேபோன்று அரசாங்கத்திற்கும் நன்மைபயக்கின்ற விதத்தில் பணவனுப்பல்கள் அவற்றின் முழுமையான உள்ளார்ந்தங்களையும் அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்ற செயன்முறைகளை முன்னெடுக்கின்றன.