'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்

மாத்தறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 நவெம்பர் 09 அன்று மு.ப 9.00 மணிக்கு மாத்தறை கேமாலி வரவேற்பு மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம், சட்ட மற்றும் இணங்குவிப்புத் திணைக்களம் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு என்பவற்றிலிருந்து வளவாளர்கள் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர்.