புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காகவும் உருகுணைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்காகவும் உருகுணைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் உருகுணைப் பல்கலைக்கழகத்தில் 2018 யூலை 18 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 274 நபர்கள் பங்கேற்றனர்.