பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபை இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 334 மில்லியன்) கொண்ட தொகைக்கு உடனடி பெறுவழியினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை பெறுகின்ற நான்காவது தாகுதியாவதுடன் அதற்கேற்ப இதுவரையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய ஆதரவு சிறப்பு எடுப்பனவு உரிமை 1.02 பில்லியனாக (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.34 பில்லியன்) அதிகரிக்கின்றது.
Published Date:
Sunday, March 2, 2025