2022 யூலை 01 தொடக்கம் 2022 நவெம்பர் 16 வரை நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாக ரீதியான தண்டப் பணங்களை விதித்தல்/சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு விதித்துரைக்கப்படுகிறது.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு  2022  யூலை 01 தொடக்கம் 2022 நவெம்பர் 16 வரையான காலப்பகுதியில் உளவறிதல் பிரிவு  கீழேயுள்ளவாறு ரூ.10.75 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது.  தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதித் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது. 

முழுவடிவம்

 

Published Date: 

Monday, December 12, 2022