வெளிநாட்டு நாணயத்தை உடைமையில் வைத்திருப்பதன் மீது வழங்கப்பட்ட கட்டளையை நீடித்தல்

இலங்கையுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு உடைமையிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவரிடம் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) வைப்புச் செய்வதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை 2022.07.26 அன்று வரை மேலும் 14 வேலை நாட்களால் நீடித்து 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணித் திட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சர் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

மேலதிகத் தகவல்களுக்கு 2287/16ஆம் இலக்க, 2022 யூலை 05ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேடம்) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையை  நீங்கள் பார்க்கலாம். இதனை www.dfe.lk என்ற இணையத்தளம் வாயிலாக தரவிறக்கம் செய்யலாம்/அணுகலாம்.

Published Date: 

Friday, July 8, 2022