2021இன் நான்காம் காலாண்டுப்பகுதியில் நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாக ரீதியான தண்டப் பணங்களை விதித்தல்/ சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய பிரிவு 19(1)இன் கீழ் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின் படி, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் இணங்கியொழுகாத தன்மைகள் பற்றிய இயல்பு மற்றும் அதன் பாரதூரமான தன்மை என்பனவற்றினை பரிசீலனையில் கொண்டு விரித்துரைக்கப்படுகிறது.

இதற்கமைய, பணம் தூயதாக்கலைத் தடை செய்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு,  நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்தும் விதத்தில் 2021 ஒத்தோபர் 01 இலிருந்து 2021 திசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் கீழேயுள்ளவாறு ரூ.1.5 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையினைத் தண்டப்பணமாக திரட்டியிருக்கிறது. தண்டப்பணமாக திரட்டப்பட்ட நிதித் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, June 29, 2022