2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டம் 2024.06.15ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவந்திருக்கின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவிரும்புகின்றது. இத்திருத்தங்கள், வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (உரிமம்பெற்ற வங்கிகள்) என்பனவற்றிற்கு ஏற்புடைத்தான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வங்கித்தொழில் வியாபாரத்தினை கொண்டு நடத்துகின்ற ஆட்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகளின் அறிமுகத்தையும் செயற்பாடுகளையும் வங்கித்தொழில் வியாபாரத்துடன் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டுப்பாட்டு விடயங்களையும் வழங்குகின்ற வங்கித்தொழில் சட்டமானது 2006இல் இறுதியாகத் திருத்தப்பட்டது. ஆகவே, இத்திருத்தங்கள், தற்போதைய ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அபிவிருத்திகள், பொருளாதாரம் மற்றும் சந்தை அபிவிருத்திகள், உள்நாட்டு வங்கித்தொழில் துறையின் பின்னணியில், சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்மதியுடைய தேவைப்பாடுகள் மீதான பன்னாட்டு நியமங்கள் என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு வடிவமைக்கப்பட்டன. மேலதிகமாக, வங்கித்தொழில் சட்டத்திற்கு திருத்தங்களை வரையும் போது, ஏற்புடைத்தானவிடத்து, தொடர்பான ஆர்வலர்களிடமிருந்து, அதாவது, வங்கித்தொழில் துறை, வங்கிகளில் கணக்காய்வுகளை நடத்தும் கணக்காய்வாளர் குழு, ஏனைய ஒழுங்குமுறைப்படுத்துனர்கள் மற்றும் அதிகாரபீடங்களின் அவதானிப்புக்களும் கருத்துக்களும் பரிசீலனையில் கொள்ளப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Friday, June 28, 2024