வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையைக் கொண்டு இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தல்

2024 சனவரியில் மத்திய வங்கியின் ஆண்டுக்கான கொள்கைக் கூற்றில் எடுத்துக்காட்டியவாறு,  இலங்கை மத்திய வங்கி, அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றைப் பிரதானமாக உள்ளடக்குகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒருங்கமைவையும் செயல்திறன்மிக்க தொழிற்பாட்டையும் மேலும் ஊக்குவிப்பதற்கான பொதுவான வழிகாட்டல் தொகுதியினைக் கடைப்பிடிக்கின்றது. இலங்கை மத்திய வங்கி மூலம் எடுக்கப்பட்ட முயற்சியிலிருந்தும்  இலங்கை வெளிநாட்டுச் செலாவணி அமைப்பிடமிருந்து கிடைத்த ஆதரவுடனும்  உருவான உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையைப் ஏற்றுக்கொள்ளுதலானது உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் முக்கிய முன்னேற்றத்தினைக் குறித்துக் காட்டுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Friday, December 13, 2024