இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியாக உருவாக்கப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்கள் மீது, குறிப்பாக முகநூலில் தற்போது பரப்பப்படுகின்றது பற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. நம்பமுடியாத நிதியியல் ஆதாயங்களுக்கு வாக்குறுதியளிக்கின்ற முதலீட்டுத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பரிந்துரைக்கின்றவாறு இக்காணொளிகள் பொய்யாகச் சித்திரிக்கின்றன. அறியாமலிருக்கின்ற தனிநபர்களை மோசடிக்குள்ளாக்குகின்ற நோக்கத்தினைக் கொண்டு இக்காணொளிகளைக் காண்பவர்களை சந்தேகத்திற்கிடமான வெளிவாரி இணைப்பொன்றிற்கும் இவை தொடர்புபடுத்துகின்றன.
Published Date:
Friday, March 7, 2025