இலங்கை மத்திய வங்கி 2020ஆம் ஆண்டினை இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல்வாங்கலுக்கான ஆண்டாகப் பெயரிட்டிருக்கிறது. இம்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உரிமம்பெற்ற வங்கிகளினாலும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினாலும் மற்றும் லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினாலும் நாட்டிற்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவுத் திட்டங்களைப் பிரபல்யப்படுத்துவதேயாகும். விழிப்புணர்வு என்பது செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு பிரயோகங்களின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான திறவுகோலாகும். இம்முயற்சி தொழில்நுட்பவியல் நியதிகளில் நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு உதவுமென மத்திய வங்கி நம்புவதன் காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீா்ப்பனவுத் திணைக்களம் டிஜிட்டல் கொடுப்பனவு மாதிரிகளைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
Tuesday, February 11, 2020